முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் தவறு ஏதும் செய்யவில்லை: பிர்லா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 20 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை குமார்மங்கலம் பிர்லா சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு எதிராக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். நான் எந்த தவறும் செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை குறித்து நான் கவலைப்படவில்லை என்றார். 

இது தொடர்பாக அமைச்சர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்யா போல் இந்தியா மாறி விடாமல் இருப்பதை நீதித்துறையும் புலனாய்வு அமைப்புகளும் உறுதிப்படுத்த வேண்டும். இங்கு உரிய ஆதாரத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர யூகங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என்று மொய்லி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்