முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 14 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை மே.15 -  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் அமோக வெற்றி பெற்று உள்ளது. அதில் அ.தி.மு.க. 146 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் தேர்வு செய்யும் கூட்டம் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

இன்று (15-ந் தேதி) தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெருவாரியான வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன. இதற்காக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாளை சென்னைக்கு வருமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். இதன் பின்னர் அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்