முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசராம் பாபுவின் மனைவி - மகளிடம் விசாரணை

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத், அக்.22 - கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசராம்பாபுவின் மனைவி, மகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர். 1997  முதல் 2006_ம் ஆண்டு வரை அசாராம்பாபுவின் ஆசிரமத்தில்  தங்கி இருந்தபோது தன்+ஏன கற்பழித்ததாக சூரத்தை சேர்ந்த ஒரு பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அசராம்பாபு என்னை கற்பழித்தபோது அசராம்பாபுவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்று அந்த பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். அசராம்பாபுவின் மகன் நாராயண் சாயின் கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக அசராம்பாபுவின் ஆசிரமத்தில் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். எனினும் அங்கு நாராயண் சாயியின் நண்பர்கள் யாரும் அங்கு இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். நாராயண் சாயின் கூட்டாளி தர்மேந்திர பரியார் என்பவரை கோர்ட்டில்  போலீஸார் ஆஜர் செய்தனர்.  அவரை வரும் 24_ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்