முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர் கட்சி தலைவராக விஜயகாந்த் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, 15-எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 205 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 41 தொகுதியில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க. இந்த முறை 29 இடங்களில் வெற்றி பெற்றதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர்கள் உடனடியாக சென்னை வருமாறு விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். 

அதன்படி எம்.எல்.ஏ.வாக பதவி எற்கும் அனைத்து வேட்பாளர்களும் நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். இதனையடுத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

தே.மு.தி.க.எம்.எல்.ஏ. கூட்டத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், என்வெற்றிக்கு வடிவேலு வசைபாடியதும் ஒரு காரணம். அவருக்கு எனது நன்றி. அ.தி.மு.க.வுடன் உறவு நல்லா இருக்கு. ஒற்றுமையாக இருக்கிறோம். ஜெயலலிதா உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாடுபடுவோம். எங்கள் செயல்பாடு எப்படி என்பது 3 மாதம் கழித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்படுவோம். முக்கிய பிரச்சினைகள் தீர அதிக அக்கறை காட்டுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்