முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவை பிரிப்பதை அனுமதிக்க மாட்டேன்: கிரண்குமார்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்22 - ஆந்திராவை பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க  மாட்டேன் என்று முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூறினார். ஸ்ரீகாகுளத்தில் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:

ஆந்திராவை பைலின் புயல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இயற்கையின் சீற்றத்தை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனால் ஆந்திராவை இரண்டாகப் பிளக்க வரும் தெலுங்கானா புயலை நான் நிச்சயம் தடுப்பேன். ஆந்திராவை பிரிக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்றார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்குள் தெலுங்கானா மசோதாவை மத்திய அமைச்சர்கள் குழு தயாரிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.ஏ  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்