முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்னடி மூளையை அவரது தம்பி மறைத்து வைத்ததாக புகார்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,அக்.23 - அமெரிக்காவின் 38_வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜான் எப் கென்னடி. இரர் கடந்த 1961 முதல் 1963 வரை பதவி வகித்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் .கடந்த 1963_ம் ஆண்டு நவம்பர் 22_ம் தேதி தனது 46_வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக லீ ஹார்லி ஆஸ்வால்டு என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த நிலையில் ஜேம்ஸ் சுவான்சன் என்பவர் கென்னடி குறித்து என்ட் ஆப் டேஸ் என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.இதில் சுட்டுக்கொல்லப்பட்ட கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது மூளையும் உடன் சேர்ந்து புதைக்கப்படவில்லை. ஏனெனில் கென்னடி மூளையை அவரது தம்பி எடுத்து மறைத்து வைத்துவிட்டார். லாக்கரில் பத்திரப்படுத்தி விட்டார் என புகார் தெரிவித்துள்ளார். 

மேலும் கென்னடிக்கு ஏற்பட்டிருந்த நோய் குறித்தும் அதற்காக அவர் எடுத்துக்  கொண்ட மருந்து மற்றும் சிகிச்சையை உலகம் அறியாமல் மறைப்பதற்காகவும் இது போன்று அவர் செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்