முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க படைக்கு உத்தரவு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.23 - காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடிகொடுக்குமாறு எல்லை பாதுகாப்புப் படைக்கு உத்தரவிப்பட்டுள்ளது. 

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த  9 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 254 முறை அத்துமீறியுள்ளது. தீவிரவாதிகள் 37 தடவை ஊடுருவ முயன்றுள்ளனர்.  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் வாலாட்டி வருகிறது. இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுத்து அவர்களை விரட்டி வருகிறது.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் அது ஈடுபட்டு வருகிறது.  பாகிஸ்தான் ராணுவம் இனிமேல் தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி  தருமாறு எல்லை பாதுகாப்புப் படை தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்