முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ. புதிய அறிக்கை தாக்கல்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.24 - நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. புதிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, நிலக்கரி துறை செயலர் பரேக் ஆகியோர் மீது அண்மையில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ. ஆர். குறித்த தகவலும், இதுதொடர்பான பிற வழக்குகளின் விசாரணையின் நிலையை விளக்கும் தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 

இதையடுத்து இந்த புதிய அறிக்கையை சீலிடப்பட்ட உறை.யில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.  இதனிடையே ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்கக்கோரி பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு 2005_ம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி அமைச்சகத்தின் பொறுப்பை வகித்து வந்தார். ஆகையால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகுதியை அடிப்படையாக வைது ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கு உரிய அதிகாரம் படைத்தவர்தான் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கடந்த 19_ம் தேதி பிரதமர் அலுவலகம் விளக்க அறிக்கையை வெளியிட்டது.

இதை அடிப்படையாக வைத்து பிரதமர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்