முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.26 - நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கியுள்ள பிரதமர் மன்மோகன் சிங் சி.பி.ஐ. முன்பு விசாரணைக்கு ஆஜராகும் முன்பு பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. 

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2003_ம் ஆண்டில் இருந்து 2007_ம் ஆண்டு வரை மத்திய நிலக்கரி சுரங்க இலாகாவையும் வகித்தார். அப்போது நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் வழங்கியதில் ரூ.ஒரு லட்சத்து 86 ஆயிரம கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று மத்திய தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனையொட்டி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த மெகா ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் சீனாவில் பயணத்தை முடித்துக்கொண்டு விமானத்தில் இந்தியா திரும்புகையில் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முன்பு விசாரணைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாரதிய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சயீத் ஷாநவாஷ் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சி.பி.ஐ. முன்பு விசாரணைக்கு தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது காலம் தாழ்ந்ததாக இருந்தாலும் அதை வரவேற்கிறோம். ஆனால் பிரதமர் அந்தஸ்த்தில் சி.பி.ஐ.முன்பு விசாரணைக்கு ஆஜராகுவது அந்த பதவிக்கு இழுக்காகும். அதனால் சி.பி.ஐ. முன்பு ஆஜராகும் முன் பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். 

ஷாநவாஸ் பேட்டியின்போது பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியும் உடன் இருந்தார். அப்போது அவர் கூறுகையில் மன்மோகன் சிங் கூறுவதை நம்ப முடியாது. இதற்கு முன்பு மற்றொரு ஊழல் வழக்கில் பாராளுமன்ற கூட்டுக்கமிட்டி முன்பு விசாரணைக்கு தயார் என்று மன்மோகன் சிங் கூறினார். ஆனால் பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். பாராளுமன்ற கூட்டுக்கமிட்டி முன்பு ஆஜராக விதிமுறைகள் இல்லை என்று கூறிவிட்டார். அதனால் சி.பி.ஐ.முன் மன்மோகன் சிங் ஆஜராகமாட்டார். ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்த பைல்களில் அவர் கையெழுத்து போட்டுள்ளார். அதனால் மன்மோகன் சிங் தார்மீக பொறுப்பேற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ரூடி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago