முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், அக். 27 - காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

இந்தியாவில் நாச வேலைகளை ஈடுபடுத்துவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்து காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ செய்தனர். இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து ஊடுருவல் முயற்சியை முறியடித்து வருகிறார்கள். காஷ்மீர் எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் தற்போது பஞ்சாப் எல்லையிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்தான். உடனே அங்கு முகாமிட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தி ஊடுருவிய தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் பாகிஸ்தானின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்