முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கிடம் ஆதாரங்களை இந்தியா ஏற்கனவே ஒப்படைத்தது

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.28 - மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கான 5 முக்கிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே ஒப்படைத்துவிட்டது. 

அமெரிக்காவுக்கு 4 நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சென்றிருந்தார். அப்போது வெள்ளைமாளைகையில் அதிபர் ஒபாமாவை ஷெரீப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது விசாரணையை பாகிஸ்தான் அரசு தொடங்காததற்கு ஷெரீப்பிடம் ஒபாமா கண்டனம் தெரிவித்தார். 

இந்தநிலையில் ஒபாமா_ஷெரீப் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசானது விரைவில் விசாரணையை தொடங்க உதவும் என்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்றும் போதுமான ஆதாரங்களை இந்தியா சமர்ப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று மும்பையில் தாக்குதல் நடத்தினர். மேலும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்துதான் நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு மேல் ஆதாரம் என்ன வேண்டும். இந்த ஆதாரங்களே 99 சதவீதம் வரை உள்ளது என்ற தெரிவித்தது. 

மேலும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்_இ_தொய்பா தீவிரவாத இயக்க கமாண்டர் ஜகியூர் ரகுமான் லஹ்வி உள்பட 7 தீவிரவாதிகள் தொடர்பாக 5 முக்கிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் இந்திய சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு. அதில் மும்பை தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகள் உடல்களை பிரதேச பரிசோதனை செய்த 2 டாக்டர்களின் வாக்குமூலம் ஆகிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மும்பை தாக்குதல் குறித்து தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பியது ஆகியவைகளும் ஆதாரங்களாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மும்பை தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்த பாகிஸ்தான் நீதிமன்ற குழுவின் விசாரணை அறிக்கையும் நீதிமன்ற குழுவுக்கு இந்தியா உதவி செய்த விபரமும் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago