முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு நேர அரசியலில் ஆர்.எஸ்.எஸ். குதிக்க வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், அக். 28 - முழு நேர அரசியலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜயசிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திக்விஜயசிங் கூறியதாவது, 

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தன்னை முழு நேர அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இது வரை இந்த இயக்கம் ஒரு கலாச்சார அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதை விட்டு விட்டு இனிமேல் முழு நேர அரசியலில் ஆர்.எஸ்.எஸ். குதிக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த விஷயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே. இதுவும் அரசியல் தானே. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எல்லாம் பேசும் போது அரசியல் பற்றித்தான் பேசுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தானை பற்றியும் பேசுகிறார்கள். அப்புறம் என்ன? அரசியலில் குதிக்க வேண்டியதுதானே? எனவே இந்த இயக்கம் தன்னை முழு நேர அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு திக் விஜயசிங் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்