முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் - லல்லு பெயரில் மோசடி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.29 - பிரதமர் மன்மோகன்சிங், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு யாதவ், ஆகியோர்களைப் போல பேசி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பணம் பறித்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  கிருஷ்ண குமார்(33) என்பவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் தத் சர்மா ஏற்கனவே ஜாமீன் கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி கிரேட்டர் கைலாஷ்_2 ல் வசித்து வருபவர் வேத்பிரகாஷ் இவரிடம் பிரதமர் மன்மோகன்சிங், லல்லு, சத்ருகன் சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி ஆகியோர் போல் பேசி பணம் பறிக்கமுயன்றதாக டெல்லி போலீசார் வழக்கு  பதிவு செய்தனர்.

 இது தொடர்பாக கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து விகாஸ் தத் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டார். இதில் சர்மாவுக்கு ஏற்கனவே கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் ரூ. 50 ஆயிரம் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தலைமறைவாக உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்