முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுகேட்பு விவகாரம்: அமெரிக்கா மீது ஜெர்மெனி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

  

பெர்லின், அக்.29 - அமெரிக் அதிபர் ஒபாமா ஒப்புதலுடன் தான் அமெரிக்க உளவுப் பிரிவுகளில் ஒன்றான தேசிய உளவு அமைப்பு ஜெர்மெனி  பிரதமர் ஏஞ்சலா மெர்கலை உளவு பார்த்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா   மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜெர்மெனியிலிருந்து  வெளியாகும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜெர்மெனி நாட்டு பிரதமர் ஏஞ்சலாவின் செல்போன் உரையாடல்களை கடந்த 2010_ம் ஆண்டு முதல் அணெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்த்து வருகிறது. இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தாமல் தொடர்ந்து கண்காணிக்கும்படி அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுபற்றி ஒபாமாவுடன், ஜெர்மெனி அதிபர் ஏஞ்சலா தொடர்பு கொண்டு உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து குற்றம் சாட்டினார்.

அப்போது இதற்குப் பதிலளித்த ஒபாமா இதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய அவர் இதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக உறுதியளித்தாராம். ஜெர்மெனி அதிபரை உளவு பார்த்த விவரம் அனைத்தும் அமெரிக்காவின் முன்னாள் ஊழியரான ஸ்நோடென் வெளியிட்ட ஆவணங்களில் உள்ளது. அதில் 2002_ம் ஆண்டுமுதல் பிரதமர் ஏஞ்சலாவின் செல்போன் ஒட்டுக்கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலாவுக்கும், ஒபாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. குறிப்பாக லிபியா போராட்டத்தில் ஜெர்மெனி அரசின் முடிவை ஒபாமா எதிர்த்தார். 2002_ம் ஆண்டு ஈராக் போரின்போது, ஜெர்மெனி படைகளை அனுப்பியது தொடர்ந்துதான் அமெரிக்கா கண்காணிக்கத் தொடங்கியதாம். உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தப்போவதாக ஸ்விட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்