முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சியில் துப்பாக்கி சண்டை: 11பேர் பலி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, அக்.29 - பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் போலீஸாருக்கும், ரவுடி கும்பலுக்கும் நடந்த மோதலில் 11பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி போலீஸ் ஐ.ஜி. ஜாகித் ஹயாத் கூறியதாவது: 

கராச்சியில் உள்ள லயாரி பகுதியில் மக்கள் கட்சித் தலைவர் ஜாபர் கொல்லப்பட்ட பிறகு பிரபல தாதாக்களான உஷைர் பலோக் மற்றும் பாபா கும்பல்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இவர்கள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கிடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். சங்கோ பகுதியில் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு பெண் இறந்தார். ரவுடிக் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்