எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா,அக்.29 - பாட்னாவில் தொடர் குண்டுவெடித்தது தொடர்பாக 2 தீவிரவாதிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன்,தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சைக்கேட்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த பிரமாண்டமான கூட்டத்திற்கு மோடி வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு 6 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. மைதானத்தில் 2 குண்டுகளும் மைதானத்திற்கு அருகில் இருந்த ஒரு தியேட்டர் பக்கம் 4 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 80_க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் 37 பேர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த தொடர் குண்டுகள் வெடிப்பதற்கு முன்பு பாட்னா ரயில் நிலையத்திலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுறையில் பெட்ரோல் குண்டுவெடித்தது. அந்த இடத்தில் சோதனை நடத்தியபோது மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது. அப்போது ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தேசிய அதிரடி படையினர் விரைந்து வந்து மைதானம் மற்றும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புலன் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். முதலில் பலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனையொட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேர் தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. பிடிபட்டுள்ள அந்த 2 தீவிரவாதிகள் தவ்சிம், இம்தியாஜ், என்று தெரியவந்துள்ளது.மேலும் தீவிரவாதிகள் ஒரு குழுவாக மைதானத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழுவில் 6 முதல் 8 பேர் இருந்திருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். அந்த 2 தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொடர்குண்டுவெடிப்பை எப்படி வெடிக்க செய்ய வேண்டும் என்பதற்கு நான்தான் திட்டம் தீட்டினேன் என்று அந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் ஒப்புக்கொண்டு இருப்பதாக பாட்னா நகர் சிறப்பு போலீஸ் அதிகாரி மனுமகாராஜ் தெரிவித்துள்ளார். பிடிபட்டுள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வரும். விரைவில் அனைத்து விபரமும் தெரிந்துவிடும் என்றும் அவர் மேலும் கூறினார். விசாரணையின்போது கிடைத்த தகவலையொட்டி ராஞ்சி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மைதானத்திற்கு வெளியே சோதனை நடத்தியதில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஒரு குண்டு கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் தீபாவளியையொட்டி தீவிரவாதிகள் தங்களுடைய கைவரிசையை காட்டலாம். அதனால் உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தின்போது உஷாராக இருக்கும்படியும் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்கும்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஜாபர் நகரில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் குண்டுவைத்ததாக தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவனுடைய நெருங்கிய கூட்டாளி தெசின் அக்தர் தலைமையில் சதித்திட்டம் தீட்டி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்மாத துவக்கத்தில் அன்சாரியை சந்தித்த அக்தர், அவரிடம் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளார். அன்சாரியும் மற்றவர்களும் சேர்ந்து மற்றவர்களும் சேர்ந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர்கள்தான் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ராஞ்சியில் அன்சாரி வீட்டில் இருந்து குக்கர் வெடிகுண்டுகள், துண்டுபிரசுரங்கள் பென்டிரைவுகள் உள்ளிட்டவை கைப்பட்டுள்ளதாக கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.