முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ அதிகாரி பலி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,அக்.29 - பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறு சுட்டதில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமாண்டர் அதிகாரி ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் எல்லைப்பகுதியில் பதட்டம் மேலும் அதிகாரித்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறல் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதோடு இந்திய காவல் முகாம்கள் மீது சரமாரியாக இயந்திர சுப்பாக்கியால் சுடுகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமிறலில் ஈடுபட்டதால் இந்திய வீரர் ஒருவர் பலியானார். இந்தநிலையில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உரி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஸ்ரீநகரில் இருந்து முஜாபர்நகருக்கு சாலை செல்கிறது. சாலையில் கமன் பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் இந்திய காவல் முகாம் உள்ளது. இந்த காவல் முகாமை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி சுட்டனர். இதில் ராணுவ அதிகாரி பிரகாஷ் சந்த் படுகாயம் அடைந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரகாஷ் சந்த் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய புகார் செய்துள்ளது. அந்த புகாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்