முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் துப்பாக்கி முனையில் ரூ. 325 கோடி கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, அக்.30 - லிபியா விமான நிலையத்தில் மர்ம கும்பல் ரூ.325 கோடியை கொள்ளையடித்துச் சென்றது. லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்துக்கு ஒரு வேன் வந்தது. அதில் பல நாடுகளின் பணம் இருந்தது.

அந்த வேன் சிர்தே விமான நியைத்துக்கு வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வேனை வழிமறித்து கடத்தியது. அதில் 325 கோடி ரூபாய் இருந்தது. பின்னர் அந்த கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லிபியாவில் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு மாற்று ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதனால் அங்கு இன்னும் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. நாடு முழுவதும் புதிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அங்கு ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், ரவுடிகள், கொள்ளையர்கள் ஆதிக்கம்  அதிகரித்துள்ளது. 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்