முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துக்கணிப்பும் ஜோதிடர் கணிப்பும் பலித்தது

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.15 - நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வார இதழ்கள், ஆங்கில இதழ்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்று தங்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தன. கடைசி கட்டமாக நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சியும், ரீடிப் என்ற இணையதளமும் கூட அ.தி.மு.க வெற்றியை உறுதி செய்தன. இந்த நிலையில்தான் 13 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது ஜெயா தொலைக்காட்சியில் சில ஜோதிடர்கள் ஆருடம் கூறினார்கள். அவர்களும் அ.தி.மு.க அணி 200 இடங்களை கைப்பற்றும் என்று கூறினார்கள். இவர்களது ஆருடமும் உண்மையாகி விட்டது. வார இதழ்கள் மற்றும் டி.விக்களின் கருத்துக் கணிப்பும் பலித்து விட்டது. 

இதே போல் மதுரை ஜெமினி மூன்ஸ் ஜோதிடர் லயன் டாக்டர் பாலசுப்பிரமணியமும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். அவரது வாக்கும் பலித்துள்ளது. ஆக, அ.தி.மு.கவை பொறுத்தவரை பத்திரிக்கைகள், டி.விக்கள் மற்றும் ஜோதிடர்களின் வாக்கு பலித்து விட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்