தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.15 - காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தங்கபாலு காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தங்கபாலு ராஜினாமாவை தொடர்ந்து எதிர் கோஷ்டியனர் தங்கபாலு கோஷ்டிகளுடன் சத்தியமூர்த்தி பவனில் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். இதனால் சத்திய மூர்த்தி பவன் போர்க்களம் போல் காட்சி அளித்தது.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்கிறது. தமிழ் நாட்டில் தொடர்ந்து 5 ஆண்டுக்கு ஒரு தடவை ஆட்சி மாற்றம் இயல்பாக நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் தமிழக மக்கள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 5 பேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும், புதிய அரசு அமைக்கும் அ.தி.மு.க.வுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகுந்த வெற்றி பெற்றது. இந்த முறை தோல்வி கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வியைக் கண்டு துவண்டு போகிற கட்சி அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவோம். 63 இடங்களில் போட்டியிட்டதில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுப்புள்ள, ஆக்கப்nullர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது பதவி ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்ப உள்ளேன்.
கேள்வி: தோல்வி காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா?
பதில்: எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அன்னை சோனியா என்னை நியமித்தார். அவரது வழிகாட்டுதலின்தான் இதுவரை தலைவர் பதவியில் பணியாற்றி வந்தேன்.
காங்கிரஸ் மேலிடத்தில் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் எனக்கு மூன்றாவது தடவை தலைவர் பொறுப்பை வழங்கி இருந்தனர். தேர்தல் தோல்விக்கு தனிப்பட்ட காங்கிரசை காரணம் சொல்ல முடியாது. எங்கள் கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே தோல்விக்கு புது விளக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:அ.தி.மு.க. வுடன் இனி காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பு உருவாகுமா?
பதில்: இதுபற்றி நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. எந்த முடிவானாலும் சோனியாதான் அறிவிப்பார். இன்று வரை தி.மு.க.வுடனான கூட்டணி, நட்பு தொடர்கிறது.
கேள்வி: ஊழல்தான் தோல்விக்கு காரணமா?
பதில்:தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பல காரணங்களில் இதுவும் ஒன்று.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.
தங்கபாலு மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தகவல் அறிந்ததும் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தங்கபாலுவை பார்க்க சென்றார். ஆனால் அவரை தங்கபாலு ஆதரவாளர்கள் உள்ளே விடவில்லை. பார்க்க அனுமதிக்கவும் இல்லை. வெளியில் வந்த கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தங்கபாலு எடுத்த முடிவு காலதாமானது. என்றாலும் இது நல்ல முடிவு. காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் இந்த முடிவை கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அன்னை சோனியா நடவடிக்கை எடுத்து வெளியே அனுப்பும் முன்பு தங்கபாலு தாமாக ராஜினாமா செய்துள்ளார் என்றார்.
இதேபோல் தங்கபாலு ராஜினாமா முடிவு தெரிந்ததும் இளங்கோவன் ஆதரவாளர்கள் மணிபால் மற்ற ஆதரவாளர்கள் சத்தயமூர்த்தி பவனுக்கு வந்தனர். அப்போது அவர்களை உள்ளே நுழைய விடாமல் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் சந்திரன் தலைமையில் தடுக்க பார்த்தனர். இதனால் இரு கோஷ்டிக்கும் தள்ளுமுள்ளு தகராறு ஏற்பட்டது. அடிதடி மோதலில் தொண்டர்களின் கட்டை கிழந்தது.
பிறகு சத்தியமூர்த்தி பவனுக்குள் புகுந்த தொண்டர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பின்பு சில நிர்வாகிகள் தலையிட்டு சமாதானப்படுத்திய பின் சத்தியமூர்த்தி பவன் அமைதியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 18 hours 52 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2022-ல் 10,000 ஆசிரியர்கள் தேர்வு
06 Jul 2022சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
-
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்
06 Jul 2022சென்னை : தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
'காளி' படம் தொடர்பாக சர்ச்சை கருத்து: திரிணமூல் எம்.பி. மஹூவா மீது வழக்கு
06 Jul 2022கொல்கத்தா : 'காளி' ஆவணப்படம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
ஜூலை 11 அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
06 Jul 2022புதுடெல்லி : ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ்.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனுவை இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்
06 Jul 2022சென்னை : அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவு
06 Jul 2022சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
கடும் வறட்சி எதிரொலி: இத்தாலியில் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
06 Jul 2022ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த டைசல் நிறுவனத்துடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்
-
நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்
06 Jul 2022கொல்கத்தா : நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங் ராஜினாமா
06 Jul 2022புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை நேற்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார்.