எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அக்.31 - 2ஜி அலைக்கற்றை கொள்கை விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இறுதி அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் வழங்கினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெறாததால் குழுவின் அறிக்கையை அவர் மீராகுமாரிடம் அளித்தார்.
இந்த அறிக்கை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது முறைப்படி இரு அவைகளிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையை இறுதி செய்வதற்காக கடந்த மாதம் 27_ம் தேதி ஜேபிசி கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பாஜக , இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கடிதங்களை சாக்கோவுக்கு அனுப்பினர். விதிகளின்படி அந்த கடிதங்களையும் இறுதி அறிக்கையில் சேர்த்து அவர் மீராகுமாரிடம் வழங்கினார். ஆனால் அவற்றில் சில கட்சிகள் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் ஆட்சேபகரமானவை என்று கருதி அவற்றை சாக்கோ திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சாக்கோ கூறியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவும், உரிமம் வழங்கவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை மிகவும் அலட்சியமாக நெறிமுறைகளை பின்பற்றியுள்ளது. 1998_2009 வரை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளை ஜேபிசி ஆராய்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே நடவடிக்கை எடுத்துள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெறும் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா செயல்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமரை ராசா தவறாக வழி நடத்தியுள்ளார். 2008_ல் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள் தகுதியற்ற நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் நிறைந்த இந்த நடவடிக்கையை சரிசெய்ய அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொலைத் தொடர்பு அலைக்கற்றை வழங்கும் கொள்கை நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக வயர்லெஸ் திட்டமிடல் ஒருங்கிணைப்புத் துறையை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா ஆவணங்களையும் அத்துறையே பதிவு செய்து வைத்திருக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு உரிமம் பெற்ற நிறுவனங்கள் எவ்வளவு அலைக்கற்றையைப் பயன்படசுத்துகின்றன என்பதை ஆராய தற்போது வசதி இல்லை. ஆராயும் பணியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போதுஅலைக்கற்றை பயன்பாட்டு நிலவரத்தை இணையத்தில் வெளியிட வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஏராளமான பரிந்துரைகள் இறுதி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன என்றார் சாக்கோ.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை கட்டணம் நிர்ணயித்ததில் சலுகை வழங்கியது குறித்து ஜேபிசி இறுதி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையால் அரசுக்கு சுஆர் ரூ. 42 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஜக்மோகன், அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அச்சலுகையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அளித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.