எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.6 - இந்திய கடற்படையுடன் கூட்டாக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 320 வீரர்களைக் கொண்ட அமெரிக்க போர்க்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. நாளை முதல் பயிற்சி நடக்கிறது.
இந்திய கடற்படை வீரர்கள், பல்வேறு நாட்டு கடற்படையுடன் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பற்றிய பயிற்சியும் அடங்கும்.அந்த வகையில் மலபார் என்ற கூட்டுப்பயிற்சியை சில ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் கூட்டுப்பயிற்சிக்காக அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மெக் காம்பெல் என்ற போர்க்கப்பல் சென்னைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் போர்ப்படையில் நீண்டகாலமாக சிறப்பாகப் பணியாற்றியவர் மெக் காம்பெல். இரண்டாம் உலகப்போரிலும் அவர் <டுபட்டிருக்கிறார். எதிரி நாட்டு போர் விமானங்களை அதிக அளவில் சுட்டு வீழ்த்திய பெருமை மெக் காம்பெலுக்கு உண்டு.அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த போர்க்கப்பலுக்கு மெக் காம்பெல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக்கப்பலின் கேப்டன் பால் லயான்ஸ், கமாண்டர் கால்பி, சென்னையில் உள்ள அமெரிக்காவுக்கான துணைத்தூதர் ஜெனீபர் மெக் இன்டைர் ஆகியோர் நிருபர்களுக்கு கப்பலில் வைத்து கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:_
இந்தக்கப்பலில் 320 வீரர்கள் உள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஆயுதங்களும் உள்ளன. பாதுகாப்பு, போர் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் இங்கு உள்ளன. இவற்றுக்கான கூட்டுப்பயிற்சி நடத்தப்படும்.இந்திய கடற்படையுடனான கூட்டுப்பயிற்சி என்பது, அமெரிக்கா, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதாகும். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இடையே இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
வரலாற்று சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் பெற்ற நாடு இந்தியா. இங்கு கூட்டுப்பயிற்சி பெறுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலாசாரம், நட்பு, ராணுவ வலிமைகள் போன்றவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கு இந்த பயிற்சி உதவும்.கூட்டுப் பயிற்சியின் போது நடத்தப்படும் ஆயுதப்பயிற்சி பற்றி வெளிப்படையாக நாங்கள் கூற முடியாது. எதிரிகளின் விமானங்கள், நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்குவதற்கான பயிற்சி, கடலில் தத்தளிக்கும் மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது, அதற்கான கருவிகளை பயன்படுத்துவது போன்றவை இந்தப் பயிற்சியில் இடம்பெறும்.
இந்திய கடற்படை சார்பில் இந்தப் பயிற்சியில் இரண்டு போர்க் கப்பல்கள் ஈடுபடவுள்ளன. 7_ந்தேதி தொடங்கும் பயிற்சி 11_ந்தேதி நிறைவடைகிறது. சர்வதேச கடல் பகுதியில் இந்த கூட்டுப்பயிற்சி நடைபெறும்.முன்னதாக நாங்கள் அழகுமிகும் சென்னையை சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். குழந்தைகள் மையங்களுக்குச் செல்ல இருக்கிறோம். சில சமுதாயப் பணிகளிலும் <டுபடலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல இந்திய கடற்படையுடன் நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையில் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட இருக்கிறோம்.
இந்த கப்பல், அமெரிக்காவின் 7_வது படைப்பிரிவைச் சேர்ந்தது. 2001_ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011_ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, அங்கு மீட்புப் பணிக்காக முதலில் சென்றது இந்தக் கப்பல்தான்.வீடு, உடமைகளை இழந்து நின்ற அந்த நாட்டு மக்களுக்கு, இந்தக் கப்பலைச் சேர்ந்த வீரர்கள் அனைவருமே, உடுத்திருந்த சீருடை தவிர தங்களுக்கான மற்ற உடைகள், உணவுகள் அனைத்தையும் வழங்கினர். போர்க்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட திருப்தியைவிட, சுனாமி மீட்புப் பணியில் கிடைத்த திருப்திதான் எங்களுக்கு நிறைவைத் தந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர் உருக்கமாகக் கூறியதாவது:_சுனாமி மீட்புப் பணியில் ஈடுபட்ட எங்களைப் பாராட்டி காகிதத்தால் ஆன கொக்கு பொம்மையை, ஜப்பான் மொழியில் கையெழுத்திட்டு அந்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். அதை பத்திரமாக கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கிறோம்.எங்களுடன் பணியாற்றி மரணமடைந்த வீரர்களையும் நாங்கள் மறக்கவில்லை. ''நீங்கள் மறக்கப்படுவதில்லை'' என்ற கறுப்புக் கொடியை அவர்களுக்கென்று வைத்திருக்கிறோம். சாப்பாட்டு அறையில் அவர்களுக்கென்று தனி மேஜையையும், தட்டு தம்ளர் போன்றவற்றையும் வைத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கப்பலில் அதி நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 360 டிகிரி கோணத்திலும் சுழன்று தாக்கும் மிகப் பெரிய பீரங்கிகள் உள்ளன. மேலும், துல்லியமாகக் கணிக்கும் ராடார் கருவிகள், வகைவகையான தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ராக்கெட்டுகள் ஏராளமாக உள்ளன.இந்த கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட போர் விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 510 அடி நீளம், 66 அடி அகலம் கொண்ட அந்தக் கப்பல், அதிகபட்சமாக மணிக்கு 30 கடல் மைல் என்ற வேகத்தில் செல்லக்கூடியதாகும். அந்தக் கப்பலில் எந்த இடத்தில் தடவிப்பார்த்தாலும் தூசி ஒட்டாது. அந்த அளவுக்கு மிகுந்த சுத்தமாக கப்பலை அமெரிக்க வீரர்கள் பராமரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த போர்க்கப்பலில் உள்ள 320 வீரர்களில் 21 சதவீதம் பேர் பெண்கள். இவர்களும் ஆண்களுக்கு நிகராக போர்ப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.