முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ஏ.பி. பரதன் வாழ்த்து

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே. - 16 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன்,துணை பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில்,  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஊழலில் திளைத்த தி.மு.க.வின் குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல் தா.பாண்டியன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்களின் பேராதரவுடன் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தங்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம். தாங்கள் மேற்கொள்ளவுள்ள பணிகள் அனைத்திலும் வெற்றி பெற்று மேலும் முன்னேற வேண்டும் என்று அந்த செய்தியில் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்