எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.8- உலக செஸ் போட்டியை சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,
இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த அதில் முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.
உலக செஸ் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் தலைமை உரையாற்றினார்.
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:_
சதுரங்க போட்டியின் தங்க சகாப்தம் என்று கூறும் அளவுக்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக நடக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவு ஜிவிகளின் விளையாட்டாக கருதப்படும் சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகவும் பெறுமைப்படுகிறோம்.
விளையாட்டுகளில் தேசிய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. மூளையின் ஜிம்னாசியமாக திகழும் சதுரங்க போட்டி என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகும். ஆடுபரையும், பார்ப்பவரையும் மிகவும் கவர்ந்த இந்த விளையாட்டின் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். 2011ம் ஆண்டில் என்னை உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் சந்தித்தபோது சென்+னில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதற்கு நான் சம்மதித்து 20 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கினேன். ரஷ்யா இந்த போட்டியை நடத்த முன்வந்து தோல்வி கண்டது. ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் இந்த உலக செஸ் போட்டி எந்தவித குலுக்கலும், ஏலமும் இல்லாமல் சென்னையில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 29 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகாக வந்த அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும்.
கடந்த காலங்களில் போர்களத்தில் இருதரப்பு ராணுவமும் நேருக்கு, நேர் நின்று மோதும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு அரங்கேறியுள்ளது. மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார். நவீன கால செஸ் போட்டியின் முன்னோடி ஆட்டம் லண்டனில் நடந்தது. ஜெர்மனி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியில் வெற்றிபெற்றார். அதை யொட்டி உலக செஸ் மாஸ்ட்டராக திகழ்நதார். இந்த உலக செஸ் சாம்பியன்களாக அலக்ஸ்சாண்டர் அலிக்னி, ஜோஸ் ராவுல், கபலன்கா, டீகரன்பெட்ரோஸியன், போரிஸ் செபாஸ்கி, பாபி பிஷர், ஆனடோலி கார்போவ், கேரிகாஸ்பரோவ், விளாடிமீர் கார்னிக் மற்றும் நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டு குறிப்பாக சென்னையில் புகழ்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் முலமாக ஏராளமான ரசிகர்களும் திறமையாளர்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
மூன்று முறை நடந்த என்னுடைய ஆட்சியின் மூலம் இந்த விளையாட்டுக்காக சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக 111.53 கோடி ரூபாய் இருமடங்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில் விளையாட்டுக்காக உள்கட்டமைப்பு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம், டென்னிஸ் ஸ்டேடியம் போன்றவை சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் 7_வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழக அரசு நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கை உலக தரத்திற்கு மாற்ற 33.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் 4.50 கோடி ரூபாய் புதுப்பிதற்கும் புதிய வசதி மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது. இப்படி என்னிருந்த பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக 2004ஆம் ஆண்டு இதற்கென்று தனியாக "தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்'' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2.2 கோடிரூபாய் மதிப்பில் அங்கு விளையாட்டு விஞ்ஞான மையத்தை உருவாக்கவும் 9.98 கோடி ரூபாய் மதிப்பில் மானிய தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எளிமையான மிகசிறந்த வீரராவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உலக கிராண்ட்டு மாஸ்டர் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். 16_வது வயதிலேயே அவர் முதல் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு முறை அந்த பட்டத்தை வென்றார். 1987ல் உலக ஜூனயர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1988ல் சர்வதேச செஸ் போட்டியில் வென்று முதல் கிராண்ட் மாஸ்டரானார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. இதையடுத்து அவர் 1993ல் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று முறை உலக செஸ் சாம்பியனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
நார்வேயில் மிகவும் புகழ்பெற்ற மார்கனஸ் கார்லஸன் சிறப்பான கிராண்ட் மாஸ்டாராவார். அவரை இங்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம். ஆனந்துக்கு சமமாக காரலஸ்சன் உலக பட்டம் பெறுவதில் மிகச்சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். இந்த போட்டி சிறப்பாக நடக்கும் என்றும் பல ஆண்டுகளுக்கு இந்த போட்டி பேசப்படும் என்றும், பாராட்டப்படும் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கௌரவிக்கும் விதத்தில் செஸ் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவை நியமிக்கும் சான்றிதழை பிடே தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் முதல்வருக்கு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.