எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.8- உலக செஸ் போட்டியை சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,
இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த அதில் முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.
உலக செஸ் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் தலைமை உரையாற்றினார்.
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:_
சதுரங்க போட்டியின் தங்க சகாப்தம் என்று கூறும் அளவுக்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக நடக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவு ஜிவிகளின் விளையாட்டாக கருதப்படும் சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகவும் பெறுமைப்படுகிறோம்.
விளையாட்டுகளில் தேசிய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. மூளையின் ஜிம்னாசியமாக திகழும் சதுரங்க போட்டி என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகும். ஆடுபரையும், பார்ப்பவரையும் மிகவும் கவர்ந்த இந்த விளையாட்டின் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். 2011ம் ஆண்டில் என்னை உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் சந்தித்தபோது சென்+னில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதற்கு நான் சம்மதித்து 20 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கினேன். ரஷ்யா இந்த போட்டியை நடத்த முன்வந்து தோல்வி கண்டது. ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் இந்த உலக செஸ் போட்டி எந்தவித குலுக்கலும், ஏலமும் இல்லாமல் சென்னையில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 29 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகாக வந்த அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும்.
கடந்த காலங்களில் போர்களத்தில் இருதரப்பு ராணுவமும் நேருக்கு, நேர் நின்று மோதும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு அரங்கேறியுள்ளது. மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார். நவீன கால செஸ் போட்டியின் முன்னோடி ஆட்டம் லண்டனில் நடந்தது. ஜெர்மனி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியில் வெற்றிபெற்றார். அதை யொட்டி உலக செஸ் மாஸ்ட்டராக திகழ்நதார். இந்த உலக செஸ் சாம்பியன்களாக அலக்ஸ்சாண்டர் அலிக்னி, ஜோஸ் ராவுல், கபலன்கா, டீகரன்பெட்ரோஸியன், போரிஸ் செபாஸ்கி, பாபி பிஷர், ஆனடோலி கார்போவ், கேரிகாஸ்பரோவ், விளாடிமீர் கார்னிக் மற்றும் நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டு குறிப்பாக சென்னையில் புகழ்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் முலமாக ஏராளமான ரசிகர்களும் திறமையாளர்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
மூன்று முறை நடந்த என்னுடைய ஆட்சியின் மூலம் இந்த விளையாட்டுக்காக சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக 111.53 கோடி ரூபாய் இருமடங்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில் விளையாட்டுக்காக உள்கட்டமைப்பு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம், டென்னிஸ் ஸ்டேடியம் போன்றவை சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் 7_வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழக அரசு நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கை உலக தரத்திற்கு மாற்ற 33.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் 4.50 கோடி ரூபாய் புதுப்பிதற்கும் புதிய வசதி மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது. இப்படி என்னிருந்த பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக 2004ஆம் ஆண்டு இதற்கென்று தனியாக "தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்'' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2.2 கோடிரூபாய் மதிப்பில் அங்கு விளையாட்டு விஞ்ஞான மையத்தை உருவாக்கவும் 9.98 கோடி ரூபாய் மதிப்பில் மானிய தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எளிமையான மிகசிறந்த வீரராவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உலக கிராண்ட்டு மாஸ்டர் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். 16_வது வயதிலேயே அவர் முதல் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு முறை அந்த பட்டத்தை வென்றார். 1987ல் உலக ஜூனயர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1988ல் சர்வதேச செஸ் போட்டியில் வென்று முதல் கிராண்ட் மாஸ்டரானார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. இதையடுத்து அவர் 1993ல் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று முறை உலக செஸ் சாம்பியனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
நார்வேயில் மிகவும் புகழ்பெற்ற மார்கனஸ் கார்லஸன் சிறப்பான கிராண்ட் மாஸ்டாராவார். அவரை இங்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம். ஆனந்துக்கு சமமாக காரலஸ்சன் உலக பட்டம் பெறுவதில் மிகச்சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். இந்த போட்டி சிறப்பாக நடக்கும் என்றும் பல ஆண்டுகளுக்கு இந்த போட்டி பேசப்படும் என்றும், பாராட்டப்படும் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கௌரவிக்கும் விதத்தில் செஸ் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவை நியமிக்கும் சான்றிதழை பிடே தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் முதல்வருக்கு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்
17 Apr 2024சென்னை : தமிழ்நாட்டில் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணி வரை முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ்.