எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.8- உலக செஸ் போட்டியை சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,
இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த அதில் முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.
உலக செஸ் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் தலைமை உரையாற்றினார்.
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:_
சதுரங்க போட்டியின் தங்க சகாப்தம் என்று கூறும் அளவுக்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக நடக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவு ஜிவிகளின் விளையாட்டாக கருதப்படும் சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகவும் பெறுமைப்படுகிறோம்.
விளையாட்டுகளில் தேசிய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. மூளையின் ஜிம்னாசியமாக திகழும் சதுரங்க போட்டி என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகும். ஆடுபரையும், பார்ப்பவரையும் மிகவும் கவர்ந்த இந்த விளையாட்டின் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். 2011ம் ஆண்டில் என்னை உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் சந்தித்தபோது சென்+னில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதற்கு நான் சம்மதித்து 20 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கினேன். ரஷ்யா இந்த போட்டியை நடத்த முன்வந்து தோல்வி கண்டது. ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் இந்த உலக செஸ் போட்டி எந்தவித குலுக்கலும், ஏலமும் இல்லாமல் சென்னையில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 29 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகாக வந்த அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும்.
கடந்த காலங்களில் போர்களத்தில் இருதரப்பு ராணுவமும் நேருக்கு, நேர் நின்று மோதும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு அரங்கேறியுள்ளது. மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார். நவீன கால செஸ் போட்டியின் முன்னோடி ஆட்டம் லண்டனில் நடந்தது. ஜெர்மனி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியில் வெற்றிபெற்றார். அதை யொட்டி உலக செஸ் மாஸ்ட்டராக திகழ்நதார். இந்த உலக செஸ் சாம்பியன்களாக அலக்ஸ்சாண்டர் அலிக்னி, ஜோஸ் ராவுல், கபலன்கா, டீகரன்பெட்ரோஸியன், போரிஸ் செபாஸ்கி, பாபி பிஷர், ஆனடோலி கார்போவ், கேரிகாஸ்பரோவ், விளாடிமீர் கார்னிக் மற்றும் நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டு குறிப்பாக சென்னையில் புகழ்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் முலமாக ஏராளமான ரசிகர்களும் திறமையாளர்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
மூன்று முறை நடந்த என்னுடைய ஆட்சியின் மூலம் இந்த விளையாட்டுக்காக சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக 111.53 கோடி ரூபாய் இருமடங்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில் விளையாட்டுக்காக உள்கட்டமைப்பு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம், டென்னிஸ் ஸ்டேடியம் போன்றவை சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் 7_வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழக அரசு நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கை உலக தரத்திற்கு மாற்ற 33.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் 4.50 கோடி ரூபாய் புதுப்பிதற்கும் புதிய வசதி மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது. இப்படி என்னிருந்த பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக 2004ஆம் ஆண்டு இதற்கென்று தனியாக "தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்'' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2.2 கோடிரூபாய் மதிப்பில் அங்கு விளையாட்டு விஞ்ஞான மையத்தை உருவாக்கவும் 9.98 கோடி ரூபாய் மதிப்பில் மானிய தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எளிமையான மிகசிறந்த வீரராவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உலக கிராண்ட்டு மாஸ்டர் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். 16_வது வயதிலேயே அவர் முதல் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு முறை அந்த பட்டத்தை வென்றார். 1987ல் உலக ஜூனயர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1988ல் சர்வதேச செஸ் போட்டியில் வென்று முதல் கிராண்ட் மாஸ்டரானார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. இதையடுத்து அவர் 1993ல் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று முறை உலக செஸ் சாம்பியனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
நார்வேயில் மிகவும் புகழ்பெற்ற மார்கனஸ் கார்லஸன் சிறப்பான கிராண்ட் மாஸ்டாராவார். அவரை இங்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம். ஆனந்துக்கு சமமாக காரலஸ்சன் உலக பட்டம் பெறுவதில் மிகச்சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். இந்த போட்டி சிறப்பாக நடக்கும் என்றும் பல ஆண்டுகளுக்கு இந்த போட்டி பேசப்படும் என்றும், பாராட்டப்படும் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கௌரவிக்கும் விதத்தில் செஸ் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவை நியமிக்கும் சான்றிதழை பிடே தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் முதல்வருக்கு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.