முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியாக தேர்தல் நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி மதுரை கலெக்டர் அறிக்கை

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 16 - மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த உதவியாக இருந்த அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13 -ம் தேதி நடைபெற்று, வாக்குஎண்ணிக்கை இந்த மாதம் 13-ம் தேதி நடந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவும், எவ்விதப்புகாரும் இன்றி சிறப்பாக நடந்தது. வருவாய்த்துறை அலுவலர்களும் மற்ற இதரத்துறை அலுவலர்களும் தேர்தல் பணியில் இரவும் பகலும் இணைந்து பணிபுரிந்தனர்.  இவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பதற்றம் மற்றும் வன்முறை இன்றி தேர்தல் நடப்பதற்கு போலீசாரும் முழு ஒத்துழைப்புக்கொடுத்தனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சியினரும் கட்டுபாடுடன் நடந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளை வாக்காளர்களிடம் எடுத்துச்சென்ற பத்திரிக்கைகளும் பாராட்டுக்குரியவை. வாக்குச்சாவடிகளுக்குப் பெருவாரியாக வந்து, நீண்ட நேரம் காத்திருந்து அமைதியான முறையில் வாக்களித்து ஜனநாயககடமை ஆற்றிய வாக்காளர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றிகையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்