எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 16 - நடைபெற்ற 14 வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வின் நிர்வாகிகளின் வாரிசுகள் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளனர். தி.மு.க. என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது இரண்டுதான். ஒன்று ஊழல், மற்றொன்று குடும்ப வாரிசு அரசியல். தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள், தி.மு.க.வின் பெரும் கிளைகளாக உள்ளனர். கட்சிக்காக உயிரை கொடுத்தவர்கள் கட்சி வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர்கள் எவரும் அக்கட்சியில் உயர்ந்த பொறுப்புக்களுக்கு வருவது குதிரைக் கொம்புதான். கருணாநிதி தி.மு.க.வின் தலைவர். அதனால் அவர் முதல்வரானார். அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வர். மற்றொரு மகன் அழகிரி மத்திய கேபினட் அமைச்சர் மட்டுமல்ல, கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளரும் கூட.
மகள் கனிமொழி எம்.பி. மற்றொரு மகன் தமிழரசன், மகள் செல்வி என தனது மகன், மகள்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புக்களை கொடுத்து அழகு பார்த்து மகிழ்ச்சியடைந்து வந்தவர் கருணாநிதி. தனது மகன்கள், மகள்களுக்குத்தான் பொறுப்புக்களா என்று யோசிப்பதற்குள் அவரது பேரன், பேத்திகளுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பொறுப்புகளை கொடுத்தவர் கருணாநிதி.
கருணாநிதியின் வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதை எதிர்ப்பவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது நாடறிந்த உண்மை. கட்சியில் கருணாநிதியின் வாரிசுகள் மட்டும் பொறுப்பில் இருப்பதை கண்ட தி.மு.க. நிர்வாகிகள், அவர்களும் தங்கள் பங்கிற்கு வாரிசுகளை கட்சி பொறுப்பாளர்களாக்கியும் வருகின்றனர். இதனால் மற்ற நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர். நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் தி.மு.க நிர்வாகிகளும், மந்திரிகளும் தங்களது வாரிசுகளுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்தனர். தங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்து விட்டாலும் தங்களது வாரிசுகள் மூலம் தொடர்ந்து செல்வாக்காக இருக்கலாம் என்று நினைத்த நிர்வாகிகள் பலர் இந்த தேர்தலில் தங்களின் மகன்களுக்கு பல கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ சீட் பெற்றனர்.
அதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன், சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் தி.மு.க.. சார்பில் களமிறக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க வேட்பாளர் செல்வம் தோற்கடித்தார். முன்னாள் தி.மு.க. அமைச்சர் என்.வி.என். சோமுவின் மகள் கனிமொழி மாதவரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி படுதோல்வியடைய செய்தார். வருவாய் துறை அமைச்சர் பெரியசாமி மகன் செந்தில் குமார் பழனி தொகுதியில் தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டார். அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் அவரை வென்றார்.
திருநெல்வேலி மேயர் சுப்பிரமணியத்தின் மகன் லெட்சுமணனும் திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக்கப்பட்டார். அவரை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நயினார் நாகேந்திரன் வென்றார். அ.தி.மு.க.வில் சபாநாயகராக இருந்து தி.மு.கவுக்கு தாவி தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் சேடபட்டி முத்தையா மகனும், டி. கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளராக இருக்கும் அவரது மகன் மணிமாறன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். தி.மு.க வில் எம்.எல்.ஏவாக இருந்த போதே அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இன்று வரை தொடர்ந்து அ.தி.மு.க.விலேயே நீடித்து தற்போது மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்ற முத்துராமலிங்கம் திருமங்கலத்தில் போட்டியிட்டார். அவர் தி.மு.க வேட்பாளரை படுதோல்வி அடைய செய்தார். தி.மு.க.வில் வாரிசுகளை எம்.எல்.ஏவாக்கி செல்வாக்கு பெற்று விடலாம், சம்பாதிக்கலாம் என்று நினைத்தவர்கள் எண்ணம் மண்ணோடு மண்ணாகி விட்டது. இந்நிலையில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தட்டுத்தடுமாறி 2,819 ஓட்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது தவிர தி.மு.க. வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மந்திரிகளுக்கும் இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.