முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு.மே.17 - ஜம்முவில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்திய தரப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் 5 முறை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்முவின் நிகோவால் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து அந்நாட்டு வீரர்கள் இந்திய பகுதியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த தாக்குதல் பின்னரே முடிவுக்கு வந்தது. முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு ஜம்முவின் புத்வார் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 5 ம் தேதி புஞ்ச் பகுதியில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இதே போன்று பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்