முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 16 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு  எதிராக மும்பையில் நடைபெற்று வரும் 2_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன் குவித்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் புஜாரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்துள்ளனர். 200_வது டெஸ்டில் ஆடி வரு ம் டெண்டுல்கர் 74 ரன் எடுத்தார். 

பின்பு 2_வது இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 2_வது நாள் ஆட்ட நேர முடிவில் 2_வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்னை எடுத்து இருந்தது. 

தற்போதைய நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியில் வலுவான  நிலையை எட்டியுள்ளது. மே.இ.தீவு அணி தடுமாறி வருகிறது. 

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் நடட்சத்திர வீரரான டெண்டுல்கர் 74 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

பின்பு சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவரான புஜாரா சதம் (113) ,  அடித்தார். 6_வது வீரராக இறங்கிய ரோகித் சர்மாவும் சதம் (111) அடித்தார். 

இதனால் இந்திய அணி முன்னணியில் உள்ளது. 

மே.இ.தீவு வேகப் பந்து வீச்சாளரான ஷில்லிங் போர்டு 5 விக்கெட் கைப்பற்றினார்.  பின்பு 2_வது இன்னிங்

சை ஆடிய மே.இ.தீவு அணி 2_வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்  இழப்பிற்கு 137 ரன்னை எடுத்து இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்