முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத ரத்னா விருது: தெண்டுல்கருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 18 - மத்திய மந்திரி ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:_ கிரிகெட் விளையாட்டின் முடிசூடா மன்னராக திகழும் சச்சின் தெண்டுல்கர் 24 வருடங்களாக விளையாடி வரலாறு படைத்தவர். உலக அளவில் புகழ் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர். மத்திய அரசு அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இளைஞர்களுக்கு தொடர்ந்து வழிக் காட்டியாக விளங்க வேண்டும். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

இந்திய அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்து நாட்டிற்கு சேவை செய்துவருபவர். அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்