முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வீட்டுக் காவலில் கிலானி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஸ்ரீநகா், நவ.19- ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவா் சையத் அலஷா கிலானி மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கிலானி கடந்த மார்ச் மாதம் தில்லியில் இருந்து திரும்பியபோது அவரை வீட்டுக்காவலில் அடைத்தனா். அதன்பின், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவரை வெளியே செல்ல போலீஸார்  அனுமதித்திருந்தனா். இதுகுறித்து கிலானியின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பால்ஹாலன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது இந்நிலையில் கிலானியை திடீரென வீட்டுக்காவலில் அடைத்து வைக்க உத்தரவிட்டுள்ளனா். பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவரை அனுமதிக்குமாறு கேட்டதற்கு போலீஸார் மறுத்துவிட்டனா் என்று தெரிவித்தார். அடுத்த வாரம், பனிஹால் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் கிலானி திட்டமிட் டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்