முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி புயல்: 5 போ் பலி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ.19- அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லி்னாய்ஸ், இண்டியானா, கணடக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு மணிக்கு 111கி.மீ வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொணடிருந்த  வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகுரக வாகனங்கள் காற்றில் பரந்தன."டன்" கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புறலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. டெலிவோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல டெலிபோன் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறந்து சாய்ந்தன. இதனால் டெலிபோன் இணைப்புகள், செல்போன் சேவைகள் முற்றிலும் முடங்கின. சூறாவளி புயலுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அப்போது டென்னிஸ் பந்து அளவில் ஐஸ்கட்டிகள் விழுந்தன. இந்த புயலுக்கு இல்லினாய்ஸ் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு மட்டும் சூறானளிப் புயலுக்கு 5 போ் பலியாகியுள்ளனா். வாஷிங்டனில் ஒருவரும், தெற்கு மால்சேக் பகுதியில் 2 பேரும் உயிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவா்கள் தவிர சூறாவளி புயலில் சிக்கி நூற்றுக்கணக்கானவா்கள் காயம் அடைந்துள்ளனா். பலா் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனா். சூறாவளி புயலினால் சுமார் 5 1/2 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மெரத்தத்தில் இல்லினாய்ஸ் மாகாணம் ஒரு போர்களம் போன்று காட்சியளிக்கிறது. இது போன்ற பாதிப்புகள்தான் இண்டியாளா மற்றும் கண்டக்கியில் ஏற்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்