எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், நவ, 19 - பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றது அப்பகுதி மக்களுக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இலங்கை வந்தவுடன் முதல் காரியமாக வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 2 மணிநேரத்துக்கும் மேல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றார். அவரது பயணம் யாழ்ப்பாணம் பகுதி மக்களுக்கு பெரு மகிழ்ச்சி தந்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், பலாலி விமான நிலையத்துக்கு அன்டனோவ் ரக விமானம் மூலம் வந்திறங்கினார். முதலில் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணம் நகருக்குள் செல்வதாக இருந்தது. பின்னர் அந்தத் திட்டம் மாற்றப்பட்டது.
கார் மூலம் யாழ்ப்பாணம் பொது நூலகம் சென்றார். அங்கு வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து தற்போதைய வடக்கு மாகாண நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். அப்போது போர்க் காலத்தில் காணாமல் போய் இன்னமும் திரும்பாமல் இருப்போரின் குடும்பத்தினர் நூலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் நூலகத்துக்கு வெளியே வந்த கேமரூன், இந்த ஆர்ப்பாட்டம் பற்றி முதல்வரிடம் கேட்டறிந்தார். அப்போது அதிர்ச்சி தெரிவித்த அவர், ''இந்த வேதனையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை'' என முதல்வரிடம் கூறினார்.
பின்னர் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் நாளிதழ் அலுவலகத்துக்கு கேமரூன் வந்தார். அங்கு, இலங்கை ராணுவத்தால் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல் நாள்) எரிக்கப்பட்ட அச்சிடும் எந்திரங்களைப் பார்வையிட்டார். இந்தச் சம்பவத்தின்போது ஒரு சில ஊழியர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளிதழின் நிர்வாக இயக்குநர் சரவணபவன், தலைமை ஆசிரியர் கானமயில்நாதன் ஆகியோரிடம் சம்பவத்துக்குக் காரணமான அம்சங்களை நாளிதழ் அலுவலகத்தில் தனி அறையில் அமர்ந்து கேமரூன் விசாரித்து அறிந்தார்.
பின்னர் உதயன் நாளிதழ் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், “அடிப்படை சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் பிரிட்டிஷ் சம்மதிக்காது. நாங்கள் தனிநபர் சுதந்திரத்தின் பக்கத்தில் நிற்கிறோம். இதோ எங்கள் தூதரக அதிகாரிகள் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்” என்றார்.
பிறகு, சபாபதிப் பிள்ளை நலன்புரி மையத்துக்கு கேமரூன் சென்றார். அங்கு ராணுவத்திடம் நிலங்களைப் பறிகொடுத்த மக்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். 23 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிலங்களைப் பறித்துக்கொண்ட ராணுவம் அவற்றைத் திரும்பத் தர வேண்டும் என அவர்கள் கேமரூனிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் பலாலி சென்ற கேமரூன், அங்கிருந்து கொழும்பு சென்றார்.
கேமரூன் வருகை குறித்து கருத்துத் தெரிவித்த உதயன் நாளிதழ் ஆசிரியர் கானமயில்நாதன், “நாங்கள் கேமரூன் வருகையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை அரசின் மீதான நிர்ப்பந்தமாகவே பார்க்கிறோம். ராணுவத்தால் நிலம் இழந்தவர்களுக்கு மீண்டும் நிலம் தரப்படவேண்டும். காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும். அடிப்படையில் பத்திரிகை சுதந்திரம் தேவை. இவற்றுக்கான சர்வதேச குரலாக கேமரூனின் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறோம்” என்றார்.
மற்றொரு பத்திரிகையாளரான திலீபன், “ கேமரூன் வருகை எங்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. இந்தியா செய்ய வேண்டியதை பிரிட்டிஷ் செய்துள்ளது. நிச்சயம் இந்த முறை இலங்கை அரசு ஓரளவுக்கேனும் எங்கள் மீது கரிசனம் காட்டும் என நம்புகிறோம். ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களையும் காணாமல் போனவர்களையும் திரும்பத் தந்தாலே போதும். நாங்கள் காலாகாலத்துக்கும் நன்றாக இருப்போம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதுபோல் வந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். அல்லது காமன்வெல்த் மாநாட்டை மொத்தமாக இந்தியா புறக்கணித்திருக்க வேண்டும். இரண்டையுமே இந்தியா செய்யவில்லை” என்றார் உணர்ச்சி பொங்க.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் பொறுப்பாளராக இருக்கும் ஸ்டான்லி, “என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான். இங்க ஒன்னச் சொல்லி அங்க ஒன்ன சொல்ல மாட்டான். சத்தியமா இந்த முறை பாருங்கோ... எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்றார் கண்ணில் நீருடன்.
பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது இதுவே முதன்முறை. அதை விட கேமரூன் பார்வையிடுவதற்கு தமிழ் நாளிதழ் அலுவலகம் ஒன்றை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தேர்வு செய்தது மிக முக்கியமானது. இது இலங்கையில் உள்ள பத்திரிகை சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் தொடர்பான மேற்குலகின் பார்வையை காட்டுவதாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.