முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சுயசரிதை எழுதுவேன்: டெண்டுல்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 19 - கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டு கால பயணத்துக்கு ஓய்வு கொடுத்து விட்டார். 

பிரியாவிடை கொடுத்த பிறகு அவர் முதல் முறையாக நேற்று முன் தினம் நிருபர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்தார். 

தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியதாவது _ கிரிக்கெட்டில் இருந்து சரியான நேரத்தில் தான் நான் ஓய்வு பெற்றுள்ளேன். 

இதனால் எந்த வருத்தமும் அடையவில்லை. எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவிக்கிறேன். 

இனி குடும்பத்தினருடன் முழு நேரத்தையும் செலவிடுவேன். அவர்களு

க்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். எனது வாழ்க்கை பற்றிய சுயசரிதை எழுத முடிவு செய்து உள்ளேன். எனது வாழ்க்கையை மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

எனது மகன் அர்ஜுனை மகிழ்ச்சியுடன் விளையாட விடுங்கள். அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்  என்று தந்தை என்ற முறையில் சொல்கிறேன். அவனிடம் அதிகமான எதிர்பார்ப்பை உருவாக்கி சுமை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்