முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்வதாக தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டொரண்டோ, நவ.19 - இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள் என்று கனடா நாட்டு மந்திரி தீபக் ஓபராய் கூறியுள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கனடா நாட்டு மந்திரி தீபக் ஓபராய்  கலந்து கொண்டார்.  இவர் இலங்கை தமிழர்கள் அனுபவித்து வரும் துயரம் பற்றி கூறியதாவது: 

இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை கள் மீறப்படுகின்றன. அங்கு தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள். அங்கு தமிழர்கள் தொடர்ந்து பிதியுடன் வாழும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதால் பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் இந்த மாநாட்டைப் புறக்கணித்தார். எனவே அவருக்குப் பதி லாக அந்த மாநாட்டில் கலந்துகொண்ட நான் இலங்கையில் மனித உறவுகள் மீறப் படுவதை கண்காணித்தேன். மேலும் போரில் பாதித்த வடக்கு மாகாணத்தில் உள்ள ஆணையிறவுக்குச் சென்று மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்