முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி-20: இலங்கை வெற்றி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, நவ. 23 -நியூசிலாந்து அணிக்கு எதிரான 2_வது டி _ 20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையையும் தனது வசமாக்கியது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி டி_ 20 போட்டி பல்லேகல்லே சர்வதேச அரங்கத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்னை எடுத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில் ரோன்ஜி 34 ரன்னும், நாதன் மெக்குல்லம் 26 ரன்னும், டேவிச் 30 ரன்னும், லதாம் 20 ரன்னும், முன்ரோ 17 ரன்னும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், மலிங்கா குலசேகரா, மேத்யூஸ், ரம்புக்வேலா, மென்டிஸ் மற்றும் பெரீரா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

இலங்கை அணி 143 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. 

இலங்கை அணி தரப்பில் முன்னணி வீரரான தில்ஷான் அதிகபட்சமாக 49 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன் எடுத்தார்.  பெரீரோ 37 பந்தில் 57 ரன் எடுத்தார். தவிர, சங்கக்கரா 20 ரன்னும் ஜெயவர்த்தனே 3 ரன்னும் எடுத்தனர். 

இந்த வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இலங்கை அணி 1_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் ரத்தாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்