முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கரின் அடுத்த திட்டம் என்ன?

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 28 - கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது 200_வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

மும்பையில் மே. இ. தீவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு அவர் கடந்த 14_ம் தேதி கண்ணீரோடு விடை பெற்றார். 

ஓய்வு பெற்ற டெண்டுல்கர் குடும்பத்துட

ன் தனது பொழுதை போக்க முடிவு செய்தார். அதன் படி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான முசோரிக்கு மனைவி அஞ்சலி, உறவினர்கள், குடும்ப நண்பர் சஞ்சய் நரங் ஆகியோருடன் சென்றார். 

அங்குள்ள லால்டிபா லண்ட்ரா பகுதியில் தங்கினார். அங்குள்ள அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் ஆட்டோ கிராப்பில் கையெழுத்து போட்டார். ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். ஒரு வாரம் விடுமுறையை களித்த அவர் மும்பை திரும்பினார். 

ஓய்வு பெற்ற பிறகு, அவரது அடுத்த திட்டம் என்ன என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. விரைவில் அவர் தனது அடுத்த கட்ட முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. அவர் பேட்டிங் ஆலோசகராக செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்