முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜார்கண்ட்-புதுவை ஆளுநர்கள் வாழ்த்து

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - தமிழக சட்டபேரவை தேர்தலில் அமோக வெறறிப்பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு, ஜார்கண்ட் புதுவை ஆளுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமனற பேரவை தேர்தலில் அ.தி.மு.க. அமோக  வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வராக பதவி ஏற்று கொண்ட ஜெயலலிதாவுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் எம்.ஓ.எச்.ஃபாரூக், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ், இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களை உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்