முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் தலைமையில் புதுச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கூட்டம்

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - அ.தி.மு.க பொதுசெயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில்  போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று மாலையில் புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புதுச்சேரிமாநில சட்டமன்ற பேரவை கழக நிர்வாகிகளாகக் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர் என்று கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

1. சட்டமன்ற கட்சித் தலைவர்:​- ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ ( உப்பளம் தொகுதி)

2. சட்டமன்ற துணை தலைவர்: - ஓம் சக்தி சேகர் எம்.எல்.ஏ. (நெல்லித்தோப்பு தொகுதி)

3.சட்டமன்ற கொறடா :-  பி.புருஷோத்தமன்  எம்.எல்.ஏ.(மணவெளி தொகுதி)

4. பொருளாளர் :-எல். பெரியசாமி எம்.எல்.ஏ  (நெட்டப்பாக்கம் தனி தொகுதி)

5. செயலாளர் ​ஏ. பாஸ்கர் எம்.எல்.ஏ. (முதலியார்பேட்டை தொகுதி)

இந்த கூட்டத்தில் தமிழக அ.தி.மு.க. கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக தலைமைநிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்