முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டேலா எப்போதும் எனது மனதில் வாழ்வார்: டெண்டுல்கர்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 8 - நெல்சன் மண்டேலா எப்போதும் எனது மனதில் வாழ்வார் என்று இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். 

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு உலகம் முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

விளையாட்டுடன் தொடர்புடைய அவருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் அனுதாபத்தை தெரிவித்து உள்ளனர். 

கிரிக்கெட் சகாப்தமான டெண்டுல்கரும், நெல்சன் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். டுவிட்டர் இணைய        தளத்தில் அவர் கூறியிருப்பதாவது _ 

நெல்சன் மண்டேலாவை சந்தித்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும். உண்மையான தூண்டுதல் மனிதர் ஆவார். அவர் எப்போதும் எனது மனதில் வாழ்வார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதே போல குத்துச் சண்டை ஜாம்பவான் மொகமதுஅலி, கால்பந்து சகாப்தம் பீலே, கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் ஆகியோர் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான தொடரை அவருக்கு அர்ப்பணிப்பு செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்