முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சீனியர் கராத்தே இந்தியஅணிக்கு 2 பதக்கம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச. 8 - துபாயில் நடைபெற்ற ஆசிய கராத்தே போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய சீனியர் மற்றும் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 3_ம் தேதி முதல் 6_ம் தேதி வரை நடந்தது. 

இதில் பங்கேற்ற இந்திய அணிக்கு 2 பதக் கம் கிடைத்தது. ஜூனியர் பெண்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிதிநன்கெட் 48 கிலோ குமிதே பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 

இதே போல சீனியர் பெண்கள் கட்டா குழு பிரிவில் ரெய்னா குப்தா, சுவேதா குப்தா, எரினா பால் (மேற்கு வங்காளம் ) ஆகியோர் அடங்கிய அணி வெண்கல பதக்கம் பெற்றது. 

பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அதன் தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன் அறிவித்துள்ளார். 

நிதிநன்கெட்டிற்கு ரூ. 1 லட்சமும், ரெய்னா குப்தா, சுவேதா குப்தா மற்றும் எரினா பால் ஆகியோர் கொண்ட குழுவிற்கு ரூ. 1 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்