முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் பிரபலத்தால் பாஜகவுக்கு பயன்: ராஜ்நாத்சிங்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.10 - மோடியின் பிரபலத்தால் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பயனடைந்துள்ளது என்று பாஜக தலைவர்  ராஜ்நாத் சிங் கூறினார். இதுபற்றி டெல்லியில்  நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும். டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார். 4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு பாடுபட்ட மோடிக்கு தனது வாழ்த்துக்களை ராஜ்நாத்சிங் தெரிவித்தார். பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மோடியை மக்கள் தங்களின்  தலை வராக ஏற்றுக்ககொண்டதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்றார்.  

டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிதின் கட்கரி கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சி நல்ல வெற்றி+யைப் பெற்றுள்ளது. பாஜக எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த தேர்தலை மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றுள்ள அரை இறுதி போட்டியாகக் கருத வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் விரும்புகின்றனர்.சோனியா, ராகுல் தலைமையை  விரும்ப வில்லை என்று மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார்.             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்