முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை மேலும் உயருகிறது

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.11 - பெட்ரோல் விலையை லிட்டருக்கு மீண்டும் ரூ.1 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலை மாற்றம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக மாதத்திற்கு இருமுறை சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் விலை சிறிது குறைக்கப்பட்டது. இதன் பிறகு 5 மாநில தேர்தலை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. அதேநேரம் கடந்த ஒருவாரமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக வரும் 16_ம் தேதி முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 50 காசு வீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் சமையல் கியாஸ் விலையும் ரூ.3_க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் தோல்வி காரணமாக மக்களை காங்கிரஸ் பழிவாங்குகிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்