முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்மிஷம்: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.11 - பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமாபுரி தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எல்,ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தர்மேந்தர் கோலி. இவர் மீது இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி  போலீஸில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆ ம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த கட்சியினர் பலர் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.எங்கள் பகுதியில் உள்ள வால்மீகி கோவிலுக்குள் அவர்கள் மது பாட்டிலை வீசினர் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். 

              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்