முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன், டிச.26 - பதவியேற்ற பிறகு வாடிகனில் போப்பா ண்டவர் பிரான்சிஸ் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். 

கிறிஸ்துமஸ் உலகம் முழவதும் நேற்றுகொண்டாடப்பட்டது. கத்தோலிக்க தலைமையகமான வாடிகனில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் போப்பா ண்டவர் பிரான்சிஸ் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். பதவியேற்ற பிறகு வாடிகனில் போப்பா ண்டவர் பிரான் சிஸ் முதல் கிறிஸ்துமஸ் கொண்டா டினா ர். 

அங்குள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் குடில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குடிலை அவர் திறந்து வைத்தார். குழந்தை இயேசுவை அதில் வைத்து இயேசு கிறிஸ்து அவதரித்ததை அவர் சித்தரித்தார். பின்னர் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் பங்கேற்றார். பின்னர் உலக மக்கள் அனைவருக்கும் அவர் கிறிஸ்துமஸ் வாழத்துக்களை தெரிவித்தார். இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரிலும் பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு பிறந்த தலமாக கருதப்படும் இடத்தின் அருகே உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்