முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த சுற்றில் நுழைய மும்பை-கொல்கத்தா-பஞ்சாப் போட்டி

சனிக்கிழமை, 21 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 21 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஏற்கனவே 5 அணிகள் வெளியேற்றப்பட்டன. இதன் விபரம் வருமாறு -  

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின் றன. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். 

நேற்று முன் தினத்துடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 

சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளது. 

ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது நினைவு கூறத்தக்கது. சென் னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடைசி லீக் ஆட்டம் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி பெங்களூரில் 22 -ம் தேதி நடக்கிறது. 

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் , புனே வாரியர் ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வா  ய்ப்பை இழந்துவிட்டன. 

இதில் கொச்சி அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடி த்து விட்டது. கொச்சி அணி இதுவரை மொத்தம் 14 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 6 வெற்றி 8 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளி பெற்று உள்ளது. 

ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 9 புள்ளிகளும் (12 ஆட்டம்) டெல்லி டேர்டெவில்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்) பெற்று உள்ளன. 

டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலை மையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கில்கிறிஸ்ட் தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் லெவன்,  ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிக ள் அடுத்த சுற்றுக்குள் நுழைய வேண்டி உள்ளது.

இந்த 3 அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கு ம் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. 

மும்பை அணி அடுத்ததாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (இன்று) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22 -ம் தேதி) ஆகிய அணிகளுடன் விளை யாடுகிறது. இதில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். 

இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் இடத்தையோ அல்ல து இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம். கொல்கத்தா நைட் ரைட ர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. இன்னும் 2 ஆட்டத்தில் அந்த அணி விளையாட வேண்டி உள்ளது. 

புனே வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஆட வே ண்டி உள்ளது. இதில் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழையமுடியும். இல்லாத பட்சத்தில் வாய்ப்பை இழக் கும். 

பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி, கடைசி லீக் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த ப் போட்டி இன்று (21 -ம் தேதி) நடக்கிறது. இதில் கண்டிப்பாக வெ ன்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும். 

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால், இந்த 2 அணிகளும், 18 புள்ளிகளுடன் சமநி லையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்