முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேன் டென்னிஸ்: அரை இறுதியில் செரீனா - ஷரபோவா

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்பேன், ஜன. 4 - பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்சும், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவும் அரை இறுதியில் மோத உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டிகடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக  நடந்து வருகிறது. 

இதில் முன்னணி வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது அரை இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. 

தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனா, சமீப காலமாக தோற்கடிக்கப்பட முடியாத வீராங்கனையாக உருவெடுத்து வருகிறார். 

அவருடன் மோதும் அரையிறுதி ஆட்டம் ஷரபோவாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் இருவரும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதியுள்ளனர். 

இதில் செரீனா 14 ஆட்டங்களிலும், ஷரபோவா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 13 ஆட்டங்களில் செரீனாவை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக வியாழக் கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6_3, 6_3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவை வென்றார். 

மற்றொரு காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீராங்கனை ஷரபோவாவும், எஸ்டோனியா வீராங்கனை கானேபியும் மோதினர். இதில் ரஷ்ய வீராங்கனை 4_6, 6_3, 6_2 என்ற செட் கணக்கில் வென்றார். 

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவும், செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிச்சும் மோதுகின்றனர். 

காலிறுதி ஆட்டங்களில் அசரென்கா சுவிட்சர்லாந்தின் ஸ்டெபானி வோஜலியையும், ஜான்கோவிச் ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்