முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன்: அரையிறுதியில் வாவ்ரிங்கா - வாசெக்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன. 5 - சென்னை ஓபன் டென்னிஸ்  போட்டியின் ஒற்றையர் அரை இறுதியில் வாவ்ரிங்கா _ வாசெக் ஜோடியும், வாஸ்லின் _ மார்செல் ஜோடியும் மோத உள்ளன. 

ஏர்செல் _ சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதன் காலிறுதி ஆட்டங்கள் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்திய வீரர் யூகி பாம்ப்ரி கால் இறுதியில் கனடா வீரர் வாசெக் போஸ் பிசில்சிடம் 3_6, 3_6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார். 

இந்தப் போட்டியின் முதல் நிலை வீரரான வாவ்ரிங்கா, 6 _ம் நிலை வீரர் மார்செல் கிரோனோலர்ஸ், 7 _ம் நிலை வீரர் ரோஜர் வாஸ்லின் ஆகியோரும் கால் இறுதியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள். 

முதல் அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரரான வாவ்ரிங்காவும், கனடா வீரர் வாசெக் போஸ்பிசிலும் மோத உள்ளனர்.  2_வது அரை இறுதியில் பிரான்ஸ் வீரர் ரோஜர் வாஸ்லினும்  ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்சும்  மோதுகின்றனர்.  

இரட்டையர் பிரிவின் கால் இறுதியில் பெஞ்சமின் _ எம்ரிச்  (ஜெர்மனி) ஜோடியும், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா இணையும் மோதின. 

இதில் ஜெர்மனி ஜோடி அபாரமாக ஆடி 6_2, 5_7, 11_ 9 என்ற செட் கணக்கில் லோபஸ் மற்றும் ஒஸ்வால்டு இணையை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி  பெற்றது. 

முதல் அரை இறுதியில் பெஞ்சமின் மற்றும் எம்ரிச் ஜோடி குரோசியாவைச் சேர்ந்த மரின் மற்றும் பவிக் இணையுடன் மோதியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்