முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேசத்தில் புழுதி புயலுக்கு 39 பேர் பலி

சனிக்கிழமை, 21 மே 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,மே.22 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் திடீரென்று பயங்கர புழுதி புயல் வீசியதில் 39 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். 

நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் அடிக்கடி புழுதிப்புயல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 18-ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் புழுதி புயல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் திருமண கோஷ்டியினர் 8 பேர் உள்பட 22 பேர் பலியானார்கள். நேற்றுக்காலையில் மீண்டும் பயங்கர புழுதி புயல் வீசியது. இதில் லஹிம்பூர் மற்றும் கோலா பகுதிகளில் 11 பேர் பலியானார்கள் மற்றும் வீடுகள் இடிந்துவிழுந்தன. மரங்கள் பல வேரோடு சாய்ந்தன என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் துலசிராம் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் 4 பேர் பலியானார்கள். முகம்மாடி பகுதியிலும் 2 பேர் பலியானார்கள். கோலா பகுதியில் புழுதி சூறாவளி காற்றிவீசியதில் ஒரு குடிசை தூக்கி எறியப்பட்டதில் கணவன், மனைவி ஆகிய இருவரும் பலியானார்கள். ஷஹசன்பூர் மாவட்டத்தில் புழுதி காற்று மற்றும் சூறாவளி காற்றுடன் மழைபெய்ததில் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் பலியானார்கள் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ராம சங்கர் மெளரியா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago